வேர்கள் அறக்கட்டளையை சேர்ந்த நாங்கள் தற்போதைய திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடியை மையமாக கொண்ட அறக்கட்டளை. 'வனத்துக்குள் வாணியம்பாடி' என்ற பெயரில் பல இடங்களில் நாட்டு மரங்களை நட்டு பராமரித்து வருகிறோம்.. முடிந்தளவு ஏரிகளில் உள்ள சீமைக்கருவேள மரங்களையும் அகற்றி வந்துள்ளோம் ஏரியை தூர்வாரியும் உள்ளோம்.. தற்போது அரசு மற்றும் தனியார் துறைகளிலிருந்து எங்கள் அறக்கட்டளைக்கு மரங்கள் நட அவர்கள் இடங்களில் அனுமதி அளித்துள்ளனர்.. எங்களிடம் தற்போது மரக்கன்றுகள் வாங்க போதிய நிதி இல்லாததால் இங்கு உதவி பெற விண்ணப்பிக்கிறோம்.. ஒரு நாட்டுமரக்கன்று ரூ110 லிருந்து ரூ170 வரை செலவாகிறது.. எங்களுக்கு பணம் தர இயலாதவர்கள் மரக்கன்றுகள் தந்தாலும் எங்களுக்கு பேருதவியாக இருக்கும்..
நன்றி
நன்றி