Help Sivanandham Anna To Save His Hands | Milaap
Help Sivanandham Anna To Save His Hands
  • Ashok

    Created by

    Ashok Balaji
  • AT

    This fundraiser will benefit

    Atchayam Trust

    from Komarapalayam, Tamil Nadu




சிவானந்தம் அண்ணா அவர்களின் உயிரை காப்பாற்ற எங்களது தொடர் பயணம் : அண்ணாவை மீண்டும் மீட்டு எடுத்தோம் 10-4-19 மாலை 6.30 மணியளவில்- அட்சயம் அறக்கட்டளைகைகள் வெட்டப்பட்டு புழுக்கள் ஊரியபடி,சீல் பிடித்து,அருகில் செல்ல முடியாத அளவிற்கு துர்நாற்றம் விசியபடி,செல்கள் இறந்த நிலையில் இருந்த கம்பிகளும் வளையங்களுக்கும் கைகளின் தசைக்குள் மறைந்து கொண்டு கைகளை மெல்ல மெல்ல வெட்டி கொண்டு வாழ வேண்டும் என்கின்ற நம்பிக்கையை இழந்து வாழ்க்கையின் கடைசி நாள்களை எண்ணிக்கொண்டு உடம்பில் உடை இல்லாமல் சாக்கடையில் இருந்து கொண்டும் வாழ்க்கையை கடத்தினார் 40 வயது மதிக்கத்தக்க கேரளாவை சிவானந்தம் அண்ணா.மிகுந்த போரட்டங்களுக்கு மத்தியில் இவரை மீட்டு சில தினங்களுக்கு முன் லட்சிமி நகர்-பவானி அருகில் மீட்டு மறுவாழ்க்கை வழங்க ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தோம்.ஆனால் மன நலம் காரணமாக அவர் அங்கு இருந்து வந்து விட்டார்.அவரை 3 நாட்களாக ஈரோடு பகுதியில் தேடினோம்.மேலும் முகநூல் பக்கத்திலும் பதிவு இட்டோம்.
நேற்று ஈரோடு சூளை பகுதில் இருப்பதாக தகவல் வந்தது.அதனை தொடர்ந்து அங்கு சென்று பார்த்தோம்.நாங்கள் போட்ட மருத்துவ கட்டுடன் சாக்கடை அருகில் ஆடை இல்லாமல் வெயிலில் படுத்து இருந்தார்.அவரை அட்சயம் நண்பர்கள் சாக்கடையில் இறங்கி மீட்டு வந்து அவரை குளியல் செய்து அவர் காயத்திற்கு மருந்து போட முயற்சி செய்த போது வந்த துர்நாற்றம் சிலரை வாந்தி எடுக்க செய்தது.ஆனால் அதையும் பொருள் படுத்தாமல் அவருக்கு மருத்துவ முதல் உதவி செய்து ஈரோடு அரசு மருத்துவ மனையில் மீண்டும் சேர்த்தோம்.
முதல் முறை எங்களை பார்த்த அவர் பயந்து ஓடினார்.ஆனால் எங்கள் அணியினர் கை அவர் மேல் பட்ட உடன் அவர் எங்கள் முகத்தை பார்த்து அமைதியாக எங்களுடன் வந்தார்.எங்களிடம் நன்கு பேசினார்.
வாழ்க்கையில் இறக்க வேண்டும் என்று ஆசை பட்ட அவர் முகத்தில் வாழ வேண்டும் என்கின்ற ஏக்கத்தை பார்க்கும் போது மிகவும் மகிச்சியாக இருந்தது.மருத்துவமனையில் சேர்த்து பாதுகாத்து வருகின்ற சிறகுகள் அணியினர் விமல்,மது,சீனிவாசன்,ஹரி,மேகலா,புவன்,விபுல் மற்றும் மீண்டும் அங்கு இருந்து செல்லாமல் இருக்க இரவு முழுவதும் பார்த்துகொண்ட ராஜ்குமார் அண்ணா மற்றும் அட்சயம் நண்பர்கள் பாலாஜி,நிவாஸ்,ரமேஷ்,பிரவீன்,மனிஷா,மோகன்,ஜேம்ஸ் அண்ணா மற்றும் அவரை மதியம் முதல் பார்வை இட்டு வந்த சுரேந்தர் அண்ணா மற்றும் அனைவர்க்கும் மிக்க நன்றி.
இவருக்கு அறுவை சிகிச்சை செய்து காப்பாற்ற வேண்டும். நண்பர்களே இவரை காப்பாற்ற உதவி செய்யுங்கள்.

Read More

Know someone in need of funds? Refer to us
support